இந்தியா, பிப்ரவரி 12 -- தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி ஹீரோயினாக இருந்து வரும் சமந்தா, நடிப்புக்கு குட்டி பிரேக் எடுத்துக்கொள்வதாக கடந்த 2022 அக்டோபர் மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர் கமிட்டான படங்களில் தனது பகுதியை மட்டும் அவசரமாக முடித்து விட்டு பிரேக் எடுத்துக்கொண்டார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டும், சில சிகிச்சைகளை மேற்கொள்வதற்காகவும் இந்த ரெஸ்ட் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். அதன்படி வெளிநாடு பயணம், புத்துணர்ச்சி, சிகிச்சை என்றிருந்த சமந்தா தற்போது நடிப்புக்கு மீண்டும் திரும்புவதாக தனது சமூக வலைத்தளபக்கத்தில் அறிவித்துள்ளார்.

தனது தோழி ஒருவருடன் இணைந்து ஹெல்த் போட்கேஸ்ட் செய்ய இருக்கிறார் சமந்தா. இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், " நான் மீண்டும் பணிக்கு திரும்புகிறேன். பணிக்கு இடைப்பட்ட காலத்தில் ...