இந்தியா, மே 2 -- உமா ரமணன் சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நேற்று மாலை காலமானார். அவரின் மறைவு இசை ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அவர் பாடிய டாப் 10 பாடல்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

"ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி(2)

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி

மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி"இளையராஜா இசையில் வாலி வரிகளில் மகா நதி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன் இருவரும் இணைந்து பாடி இருப்பார்கள்.

"ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

மல...