இந்தியா, ஏப்ரல் 27 -- Manipur Violence: மணிப்பூரில், நாரன்சேனா பகுதியில் ஏப்ரல் 26ஆம் தேதி நள்ளிரவு குக்கி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த (சிஆர்பிஎஃப்) வீரர்கள் உயிர் இழந்தனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2:15 மணி வரை குக்கி தீவிரவாதிகளால், சிஆர்பிஎஃப் வீரர்கள் தாக்கப்பட்டதாக மணிப்பூர் போலீசார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

உயிரிழந்த வீரர்கள், மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாரன்சேனா பகுதியில் நிறுத்தப்பட்ட சிஆர்பிஎஃப் 128ஆவது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள்.

"சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தங்கியிருக்கும் முகாமை குறிவைத்து மலை உச்சியில் இருந்து குக்கி தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். நள்ளிரவு 12.30 மணியளவி...