இந்தியா, மே 9 -- உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் தனக்கென உருவம் இல்லாமல் இந்த திருமேனியில் உலகமெங்கும் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு திரும்பும் இடமெல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உயிரினங்கள் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை வெகுஜன மக்களால் போற்றப்படும் இறைவனாக சிவபெருமான் திகழ்ந்து வருகிறார்.

மன்னர்கள் காலத்திலிருந்து இன்று வரை சிவபெருமான் குலதெய்வமாக திகழ்ந்து வருகின்றார். சிவபெருமானின் பரம பக்தனாக எத்தனையோ மன்னர்கள் இருந்து வந்துள்ளனர். காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ கோயில்களை மன்னர்கள் கட்டியுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதர் திருக்கோ...