இந்தியா, மே 8 -- மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நாளை பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ள நிலையில், அதனை பெறுவதற்காக டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கேப்டனுக்கு நாளை டெல்லியில் பத்ம பூஷன் விருது தர உள்ளதால் நாங்கள் இன்று டெல்லி செல்கிறோம். நாளை மாலை 6.30 மணிக்கு மேல் இந்த விருது நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கு பின்னர் வரும் 10ஆம் தேதி மாலை டெல்லி தமிழ் சங்கம் சார்பாக கேப்டனுக்கு பாராட்டு விழா நடக்க உள்ளது. அந்த நிகழ்ச்சியிலும் நாங்கள் கலந்து கொள்கிறோம்.

11ஆம் தேதி சென்னை திரும்பும் நாங்கள், இங்கிருந்து கேப்டன் கோயில் வரை சென்று கேப்டனுக்கு விருதுகளை சமர்பிக்க உள்ளோம் என கூறினார்.

முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வில் கேப்ட...