இந்தியா, ஏப்ரல் 27 -- Body Of Fisherman: மும்பை: கடந்த மார்ச் 17ஆம் தேதி பாகிஸ்தான் சிறையில் இறந்ததாகக் கூறப்படும் மகாராஷ்டிராவின் பால்கரில் உள்ள தஹானுவைச் சேர்ந்த மீனவரின் உடல் ஏப்ரல் 29ஆம் தேதி, அவரது கிராமத்திற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின், பால்கர் மாவட்டத்தின் தஹானு தாலுகாவில் உள்ள கோரத்பாடா குக்கிராமத்தில் வசிப்பவர், வினோத் லக்ஷ்மண் கோல் (45). குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகில் பணிபுரிந்த அவர், 2022ஆம் ஆண்டு, அக்டோபரில் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக பாகிஸ்தான் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வினோத் கோல், மார்ச் 8ஆம் தேதி, குளிக்கும் போது மயங்கி விழுந்து பாகிஸ்தான் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் மார்ச் ...